Friday, July 31, 2009

போட்டிக் கவிதைத் தலைப்பு "ஒன்றிணைவோம் சிங்கப்பூர்"





வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 8ம் தேதி தேசிய நாள் சிறப்புக் கவிச்சோலையாக மலருகிறது.


இடம்: பெக் கியோ சமூக மன்றம் .97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751.



பேராசிரியை முனைவர் சரஸ்வதி வேணுகோபால் அவர்கள் "நாட்டுப்புற இலக்கியம்" குறித்துப் பேசுவார்கள். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா.ஆண்டியப்பன் அவர்கள் சிங்கப்பூர் வரலாறு பற்றி ஒரு படவில்லைக் காட்சியைப் படைக்கிறார்கள். போட்டிக் கவிதைக்கான தலைப்பு "ஒன்றிணைவோம் சிங்கப்பூர்". நேரம் மாலை மணி 6.30

Wednesday, July 29, 2009

பெருங்கவிக்கோ வா. மு. சே. உடன் ஒரு கலந்துரையாடல்


அன்புடையீர், வணக்கம்.தமிழகத்தின் முதுபெரும் கவிஞர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை 31.07.2009 மாலை மணி 6.00க்கு லிட்டில் இந்தியாவில் உள்ள பனானா லீப் அப்போலோவில் கலந்துரையாடல் நடைபெறும். மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஒரு மாநாடு குறித்து இங்குள்ள தமிழ் அன்பர்களுடன் அவர் கலந்துரையாட விரும்புகிறார். அதனால் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என அழைக்கிறோம். அனுமதி இலவசம்.!

அன்புடன்
நா. ஆண்டியப்பன்
தலைவர்சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

Tuesday, January 27, 2009

பிப்ரவரி 2009 - சிறப்புக் கவிச்சோலையும் நூல் அறிமுகமும்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் மாதவி இலக்கிய மன்ற ஆதரவுடன் இணைந்து படைக்கும் சிறப்புக் கவிச்சோலையும் நூல் அறிமுகமும்.

சிறப்புரை: தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற
புலவர் இளஞ்செழியன் (தலைவர், உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை).
"இளஞ்செழியன் கவிதைகள்"
நூல் அறிமுகம்: நா.ஆண்டியப்பன் (தலைவர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்).

நாள்: ஞாயிறு 01- பிப்ரவரி 2009 மாலை மணி 6:30.
இடம்: பெக் கியோ சமூக மன்றம், 97 கேம்பிரிட்ஜ் சாலை, சிங்கப்பூர் 219751
பாத்தென்றல் முருகடியான் அவர்களின் இலக்கண வகுப்பும், கவிதைப் போட்டியும் வழக்கம் போல நடைபெறும். கவிதைப் போட்டிக்குத் தலைப்பு: "நந்தவன நாட்கள்"
அனைவரும் வருக! தமிழ்த்தேன் பருக!