Tuesday, August 11, 2009

"அமுதசுரபி" ஆசிரியருடன் கலந்துரையாடல்


ஜோஸ்கோ பயண ஏற்பாட்டுக் கழகம், தங்கம் உணவு மாளிகை, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆகியவை இணைந்து படைக்கும் கலந்துரையாடல்.
தமிழகத்தின் "அமுதசுரபி" இதழின் ஆசிரியர் திருப்பூர் திரு.கிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கிறார்.
இடம்: உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம், (லாவெண்டர் MRT அருகில்)
நாள்:ஞாயிறு 16 ஆகஸ்ட் 2009 மாலை 6:மணி
ஞாயிறு நேசன் பொறுப்பாசிரியர் திரு.ப.சந்திரகாந்தம் அவர்களின் நாவல் "ஆளப் பிறந்த மருது மைந்தன் " நூல் அறிமுகமும் இடம்பெறும்.
அனைவரும் வருக!! அனுமதி இலவசம்!!!
தொடர்புக்கு: நா. ஆண்டியப்பன் - 97849105, சுப.அருணாசலம் - 93221138

Sunday, August 9, 2009

அரிய தகவல்கள் தந்த "சிங்கப்பூர் வரலாறு"


தேசியதினச் சிறப்புக் கவிச்சோலை சனிக்கிழமை (08.08.09) மாலை 7:15 மணியளவில் பெக் கியோ சமூக மன்றத்தில் ஆரம்பமாகியது.

இராம.வயிரவன் அனைவரையும் வரவேற்றமர்ந்ததும், சி.த.எ.க தலைவர் நா. ஆண்டியப்பன் "சிங்கப்பூர் வரலாறு" பற்றிய படவில்லைக் காட்சியினைப் படைத்தார். அந்தப் படைப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரிந்து பல அரிய தகவல்களுடன் தேசியநாளுக்குப் பொருத்தமாக அமைந்தது.

சிறப்புச் செய்தல் அங்கத்தில் சி.த.எ.க வின் புரவலர்கள் தங்கம் உணவு மாளிகையின் உரிமையாளர் நாகை தங்கராசு அவர்கள் "தமிழ் வள்ளல்" பட்டம் பெற்றமைக்காகவும், மாதவி இலக்கிய மன்றத்தலைவர் தமிழ் நெஞ்சர் என்.ஆர்.கோவிந்தன் அவர்கள் "மதிப்புறு முனைவர்" பட்டம் பெற்றமைக்காகவும் சி.த.எ.கழகம் சிறப்புச் செய்வதாக செயலாளர் சுப.அருணாசலம் அறிவிக்க தலைவர் ஆண்டியப்பன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

சிறப்புரை அங்கத்தில் மதுரை காமராசர் பல்கலையின் நாட்டுப்புற இயலின் முன்னாள் தலைவர் முனைவர் சரசுவதி வேணுகோபால் அவர்கள் "நாட்டுப்புற இலக்கியம்" பற்றிப் பேசுகையில் கிராமங்களில் பாடப்படுகிற பாடல்களின் பொதுவான தன்மைகளைக் கூறி அதன் அழகை, இயல்பாக அமைந்து விடுகிற எதுகை மோனை, எளிமை பற்றிக்கூறி பாடியும் காட்டினார்.

அடுத்து போட்டிக்கவிதை அங்கத்தில் "ஒருங்கிணைவோம் சிங்கப்பூர்" தலைப்பில் கவிஞர்கள் கவிதைகள் படைத்தனர். மூன்று கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு நூர்ஜகான் சுலைமான், ராஜூகலைவேந்தன், கோவிந்தராசு மூவருக்கும் பரிசுகள் (தலா 30 வெள்ளிகள்) வழங்கப்பட்டன.

செயலாளர் சுப.அருணாசலம் நன்றி கூற கவிச்சோலை இரவு 9:30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

Friday, July 31, 2009

போட்டிக் கவிதைத் தலைப்பு "ஒன்றிணைவோம் சிங்கப்பூர்"





வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 8ம் தேதி தேசிய நாள் சிறப்புக் கவிச்சோலையாக மலருகிறது.


இடம்: பெக் கியோ சமூக மன்றம் .97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751.



பேராசிரியை முனைவர் சரஸ்வதி வேணுகோபால் அவர்கள் "நாட்டுப்புற இலக்கியம்" குறித்துப் பேசுவார்கள். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா.ஆண்டியப்பன் அவர்கள் சிங்கப்பூர் வரலாறு பற்றி ஒரு படவில்லைக் காட்சியைப் படைக்கிறார்கள். போட்டிக் கவிதைக்கான தலைப்பு "ஒன்றிணைவோம் சிங்கப்பூர்". நேரம் மாலை மணி 6.30

Wednesday, July 29, 2009

பெருங்கவிக்கோ வா. மு. சே. உடன் ஒரு கலந்துரையாடல்


அன்புடையீர், வணக்கம்.தமிழகத்தின் முதுபெரும் கவிஞர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை 31.07.2009 மாலை மணி 6.00க்கு லிட்டில் இந்தியாவில் உள்ள பனானா லீப் அப்போலோவில் கலந்துரையாடல் நடைபெறும். மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஒரு மாநாடு குறித்து இங்குள்ள தமிழ் அன்பர்களுடன் அவர் கலந்துரையாட விரும்புகிறார். அதனால் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என அழைக்கிறோம். அனுமதி இலவசம்.!

அன்புடன்
நா. ஆண்டியப்பன்
தலைவர்சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

Tuesday, January 27, 2009

பிப்ரவரி 2009 - சிறப்புக் கவிச்சோலையும் நூல் அறிமுகமும்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் மாதவி இலக்கிய மன்ற ஆதரவுடன் இணைந்து படைக்கும் சிறப்புக் கவிச்சோலையும் நூல் அறிமுகமும்.

சிறப்புரை: தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற
புலவர் இளஞ்செழியன் (தலைவர், உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை).
"இளஞ்செழியன் கவிதைகள்"
நூல் அறிமுகம்: நா.ஆண்டியப்பன் (தலைவர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்).

நாள்: ஞாயிறு 01- பிப்ரவரி 2009 மாலை மணி 6:30.
இடம்: பெக் கியோ சமூக மன்றம், 97 கேம்பிரிட்ஜ் சாலை, சிங்கப்பூர் 219751
பாத்தென்றல் முருகடியான் அவர்களின் இலக்கண வகுப்பும், கவிதைப் போட்டியும் வழக்கம் போல நடைபெறும். கவிதைப் போட்டிக்குத் தலைப்பு: "நந்தவன நாட்கள்"
அனைவரும் வருக! தமிழ்த்தேன் பருக!