Thursday, March 4, 2010

கவிச்சோலை -101

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் இணைந்து நடத்தும் 101வது கவிச்சோலை வரும் 7,3,2010 ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 7.00க்கு பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெறும். ஐக்கிய நாட்டு நிறுவனம் மார்ச் 8ஆம் தேதியை அனைத்துலக மகளிர் தினமாக அறிவித்துக் கொண்டாடி வருவதை முன்னிட்டு இம்மாதக் கவிதைப் போட்டிக்கான தலைப்பு "பெண்ணின்
பெருமை" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டைப் புலவர் அரங்க நெடுமாறன் அவர்கள் "பெண்பாற் புலவர்கள்" குறித்து சிறப்புரை ஆற்றுவார்.
வழக்கம் போல் "படித்தது, பிடித்தது, ரசித்தது" அங்கம் இடம்பெறும்.
கவிதை ஆர்வலர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வாருங்கள் தோழர்களே கவிதை வாசிப்போம்! கவிதையை நேசிப்போம்!! கவிதையை சுவாசிப்போம்!!!

அன்புடன்
நா. ஆண்டியப்பன்