Wednesday, February 27, 2013

கவிச்சோலையில் பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியன்


சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை  வரும் சனிக்கிழமை (2-3-2013) பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது, இந்தச் கவிச்சோலையில் சென்னை பச்சையப்பன் கல்​லூரியின் முன்னாள் முதல்வரும் தமிழாலயம் இதழின்  ஆசிரியருமான முனைவர் மு.பி. பாலசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றுவார். அ,வர் ,எழுதியுள்ள இலக்கிய முன்றில் எனும் ​நூல் பற்றி பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன் உரையாற்றுவார.
 
கவிச்சோலைப் போட்டிக் கவிதையின் தலைப்பு "இலக்கியம்". இந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
 
சனிக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கும் மார்ச் மாத கவிச்சோலை சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம். தமிழவேள் நற்பணி மன்றம் ஆகியவற்றுடன் ஆதரவுடன் நடைபெறுகிறது.
மொத்தம் $150 ரொக்கப் பரிசுகளும் புத்தகப் பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.இந்தத் தொகையை பெயரை வெளியிட விரும்பாத தமிழன்பர் ஒருவர் ஓராண்டுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். திடீர் ​ஹைக்கூ கவிதைப் போட்டியும் இ,டம்பெறும்
 
 அனுமதி இலவசம்...அனைவரும் வருக...
தொடர்புக்கு இராம.வயிரவன் 93860497,

கவிச்சோலையில் “இலக்கிய முன்றில்” நூல் ஆய்வுரை



மார்ச் 2-ஆம் தேதி சனிக்கிழமை மாலை

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்தும் கவிச்சோலையில்

இலக்கிய முன்றில்நூல் ஆய்வுரை.


வரவேற்புரை : திரு சுப அருணாச்சலம், செயலாளர்

தலைமையுரை : திரு நா. ஆண்டியப்பன், தலைவர்

நன்றியுரை: திரு இராம. வைரவன், பொருளாளர்

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் மார்ச்சு 2-ஆம் நாள் மாலை 6:30 மணி அளவில் நடத்தும் மார்ச்சு மாதக் கவிச்சோலை நிகழ்ச்சியில் முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.

இந்த விழா கேம்ப்ரிட்ஜ் சாலையில் அமைந்திருக்கும் பெக்கியோ சமூக மன்றத்தில் நடைபெறும்.


அவ்விழாவில் முனைவர் மு பி பாலசுப்பிரமணியன் அவர்களின்இலக்கிய முன்றில்என்ற நூலை பேராசிரியர் மூத்த தமிழறிஞர் முனைவர் சுப திண்ணப்பன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தி அறிமுகப் படுத்துவார்.

கவிச்சோலையில் கலந்து கொள்ளும் கவிஞர்கள்இலக்கியம்என்ற தலைப்பில், தான் இயற்றிய கவிதைகளை வாசிப்பார்கள். பரிசு பெற்ற கவிதைகளுக்கு திரு மு.பி.பாலசுப்பிரமணியன் அவரகள் பரிசளித்து சிறப்புச் செய்வார்கள்.


கடந்த 2011-ஆம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் உலக எழுத்தாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.



இந்த விழா திரு இலியாஸ் அவர்கள் நடத்திவரும்செம்மொழிஇதழ்,  தழிழவேள் நற்பணி மன்றம், மற்றும் முனைவர் இரத்தின வேங்கடேசன் தலைமையில் இயங்கும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறுகிறது.

Friday, February 1, 2013

புதிய வடிவத்தில் கவிச்சோலை - மொத்தம் $150 பரிசுகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும்பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை புதிய வடிவத்தில் புதிய அங்கங்களுடன்  வரும் ஞாயிற்றுக்கிழமை (3-2-2013பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது, இந்தச் கவிச்சோலையிலிருந்து மாதம் மொத்தம் $150 ரொக்கப் பரிசுகளும், புத்தகப் பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.இந்தத் தொகையை பெயரை வெளியிட விரும்பாத தமிழன்பர் ஒருவர் ஓராண்டுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஞாயிறு இரவு 7.00 மணிக்குத் தொடங்கும் கவிச்சோலையில் சில புதிய அங்கங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

கவிச்சோலைப் போட்டிக் கவிதையின் தலைப்பு "பாம்பு". சீனப் புத்தாண்டை ஒட்டி இந்தத் தலைப்பு கொடுக்கப்படுகிறது. அந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். பரிசுகள் எப்படி வழங்கப்படும் எத்தனை கவிதைகளுக்கு வழங்கப்படும் என்று நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...
தொடர்புக்கு இராம.வயிரவன் 93860497,