Wednesday, February 27, 2013

கவிச்சோலையில் பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியன்


சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை  வரும் சனிக்கிழமை (2-3-2013) பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது, இந்தச் கவிச்சோலையில் சென்னை பச்சையப்பன் கல்​லூரியின் முன்னாள் முதல்வரும் தமிழாலயம் இதழின்  ஆசிரியருமான முனைவர் மு.பி. பாலசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றுவார். அ,வர் ,எழுதியுள்ள இலக்கிய முன்றில் எனும் ​நூல் பற்றி பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன் உரையாற்றுவார.
 
கவிச்சோலைப் போட்டிக் கவிதையின் தலைப்பு "இலக்கியம்". இந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
 
சனிக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கும் மார்ச் மாத கவிச்சோலை சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம். தமிழவேள் நற்பணி மன்றம் ஆகியவற்றுடன் ஆதரவுடன் நடைபெறுகிறது.
மொத்தம் $150 ரொக்கப் பரிசுகளும் புத்தகப் பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.இந்தத் தொகையை பெயரை வெளியிட விரும்பாத தமிழன்பர் ஒருவர் ஓராண்டுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். திடீர் ​ஹைக்கூ கவிதைப் போட்டியும் இ,டம்பெறும்
 
 அனுமதி இலவசம்...அனைவரும் வருக...
தொடர்புக்கு இராம.வயிரவன் 93860497,

No comments:

Post a Comment