Wednesday, February 27, 2013

கவிச்சோலையில் “இலக்கிய முன்றில்” நூல் ஆய்வுரை



மார்ச் 2-ஆம் தேதி சனிக்கிழமை மாலை

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்தும் கவிச்சோலையில்

இலக்கிய முன்றில்நூல் ஆய்வுரை.


வரவேற்புரை : திரு சுப அருணாச்சலம், செயலாளர்

தலைமையுரை : திரு நா. ஆண்டியப்பன், தலைவர்

நன்றியுரை: திரு இராம. வைரவன், பொருளாளர்

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் மார்ச்சு 2-ஆம் நாள் மாலை 6:30 மணி அளவில் நடத்தும் மார்ச்சு மாதக் கவிச்சோலை நிகழ்ச்சியில் முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.

இந்த விழா கேம்ப்ரிட்ஜ் சாலையில் அமைந்திருக்கும் பெக்கியோ சமூக மன்றத்தில் நடைபெறும்.


அவ்விழாவில் முனைவர் மு பி பாலசுப்பிரமணியன் அவர்களின்இலக்கிய முன்றில்என்ற நூலை பேராசிரியர் மூத்த தமிழறிஞர் முனைவர் சுப திண்ணப்பன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தி அறிமுகப் படுத்துவார்.

கவிச்சோலையில் கலந்து கொள்ளும் கவிஞர்கள்இலக்கியம்என்ற தலைப்பில், தான் இயற்றிய கவிதைகளை வாசிப்பார்கள். பரிசு பெற்ற கவிதைகளுக்கு திரு மு.பி.பாலசுப்பிரமணியன் அவரகள் பரிசளித்து சிறப்புச் செய்வார்கள்.


கடந்த 2011-ஆம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் உலக எழுத்தாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.



இந்த விழா திரு இலியாஸ் அவர்கள் நடத்திவரும்செம்மொழிஇதழ்,  தழிழவேள் நற்பணி மன்றம், மற்றும் முனைவர் இரத்தின வேங்கடேசன் தலைமையில் இயங்கும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment