Saturday, August 4, 2012

கவிச்சோலையில் பேராசிரியர் கவிஞர் சபா. அருணாசலம் கவிஞர் இரவி பாரதி சிறப்புரைகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும்மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை இன்று சனிக்கிழமை  (4-8-2012) பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது,

பெக் கியோ சமூக மன்றத்தில் இன்று இரவு 7.00 மணிக்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புரை ஆற்றவிருக்கின்றனர்.

தேவகோட்டை சேவுகன்-அண்ணாமலை கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கவிஞர்  சபா.அருணாசலம்பூக்களைப் பறியுங்கள்எனும் தலைப்பிலும் கவிஞர் இரவி பாரதி கண்ணதாசன் கவிதைகள்எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றுவர்.

இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "மூர்த்தி சிறிது ". இந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ்  எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...
தொடர்புக்கு இராம.வயிரவன் 93860497,