Sunday, December 30, 2012

130 வது கவிச்சோலையில் கவிஞர் கார்வண்ணன்



2012 டிசெம்பர் 1 ஆம் தேதி பெக் இயோ சமூக மன்றத்தில் நடந்த 130 ஆவது கவிச்சோலையில் கவிஞர் கார்வண்ணன் அவர்களின் சிறப்புரையும் தினமலரின் மூத்த செய்தியாளர் திரு. வெ. புருசோத்தமன் அவர்களின் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவும் சிறப்பாக அமைந்தன.
·         கவிஞர்கள் ஒபாமா’ என்ற தலைப்புக்குப் போட்டிக்கவிதைகள் எழுதிவந்திருந்தார்கள். அவற்றில் மூவருக்கு 30 வெள்ளி ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.

பரிசு பெற்ற 3 கவிஞர்கள்

1.      கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கம்
2.      கவிஞர் கீதாஞ்சலி
3.      கவிஞர் ரமா

கவிச்சோலை மாலை 7:35 க்குத் துவங்கி 9:30க்கு நிறைவடைந்தது.

கவிச்சோலையில் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு ஆரம்பம்



2012 நவம்பர் 4 ஆம் தேதி,

பெக் இயோ சமூக மன்றத்தில் நடந்த 129 ஆவது கவிச்சோலையில் தினமலரின் மூத்த செய்தியாளர்
திரு. வெ. புருசோத்தமன் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவை ஆரம்பித்து சிறப்பாக உரையாற்றினார்கள்.


சொற்பொழிவைக் கேட்க எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞர் முனைவர் சுப. திண்ணப்பன், புரவலர் வள்ளல் ஜோதி மாணிக்க வாசகம் உள்பட பலரும் வந்திருந்தார்கள். 



 கவிஞர்கள் சிதறிய சதங்கைகள்’ என்ற தலைப்புக்குப் போட்டிக்கவிதைகள் எழுதி வந்திருந்தார்கள். அவற்றில் மூவருக்கு 30 வெள்ளி ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.


பரிசு பெற்ற 3 கவிஞர்கள்

1.      கவிஞர் இனியதாசன்
2.      கவிஞர் அம்பை பாலசரஸ்வதி
     3.  கவிஞர் சத்தியமூர்த்தி


கவிச்சோலை மாலை 7:35 க்குத் துவங்கி 9:30க்கு நிறைவடைந்தது.