Sunday, December 30, 2012

130 வது கவிச்சோலையில் கவிஞர் கார்வண்ணன்



2012 டிசெம்பர் 1 ஆம் தேதி பெக் இயோ சமூக மன்றத்தில் நடந்த 130 ஆவது கவிச்சோலையில் கவிஞர் கார்வண்ணன் அவர்களின் சிறப்புரையும் தினமலரின் மூத்த செய்தியாளர் திரு. வெ. புருசோத்தமன் அவர்களின் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவும் சிறப்பாக அமைந்தன.
·         கவிஞர்கள் ஒபாமா’ என்ற தலைப்புக்குப் போட்டிக்கவிதைகள் எழுதிவந்திருந்தார்கள். அவற்றில் மூவருக்கு 30 வெள்ளி ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.

பரிசு பெற்ற 3 கவிஞர்கள்

1.      கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கம்
2.      கவிஞர் கீதாஞ்சலி
3.      கவிஞர் ரமா

கவிச்சோலை மாலை 7:35 க்குத் துவங்கி 9:30க்கு நிறைவடைந்தது.

கவிச்சோலையில் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு ஆரம்பம்



2012 நவம்பர் 4 ஆம் தேதி,

பெக் இயோ சமூக மன்றத்தில் நடந்த 129 ஆவது கவிச்சோலையில் தினமலரின் மூத்த செய்தியாளர்
திரு. வெ. புருசோத்தமன் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவை ஆரம்பித்து சிறப்பாக உரையாற்றினார்கள்.


சொற்பொழிவைக் கேட்க எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞர் முனைவர் சுப. திண்ணப்பன், புரவலர் வள்ளல் ஜோதி மாணிக்க வாசகம் உள்பட பலரும் வந்திருந்தார்கள். 



 கவிஞர்கள் சிதறிய சதங்கைகள்’ என்ற தலைப்புக்குப் போட்டிக்கவிதைகள் எழுதி வந்திருந்தார்கள். அவற்றில் மூவருக்கு 30 வெள்ளி ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.


பரிசு பெற்ற 3 கவிஞர்கள்

1.      கவிஞர் இனியதாசன்
2.      கவிஞர் அம்பை பாலசரஸ்வதி
     3.  கவிஞர் சத்தியமூர்த்தி


கவிச்சோலை மாலை 7:35 க்குத் துவங்கி 9:30க்கு நிறைவடைந்தது.

Thursday, October 4, 2012

கவிச்சோலையில் அம்பை பாலசரஸ்வதி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும்  மாதந்தோறும் இணைந்து படைக்கும்  கவிச்சோலை வரும் சனிககிழமை  (6-10-2012) பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது,


பெக் கியோ சமூக மன்றத்தில் இரவு 7.00 மணிக்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்ச்சியில் தமிழகத்தின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றின் முன்னாள் முதல்வர் அம்பை பாலசரஸ்வதி கவிதைப் பூக்கள் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.


இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "அண்ணல் காந்தி". இந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும்  30 வெள்ளி பரிசு வழங்கப்படும்.
வழக்கம்போல் படித்த, ரசித்த, வடித்த கவிதை அங்கமும உண்டு,
அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497

Friday, September 7, 2012

கவிச்சோலையில் ஐம்பெரும் காப்பியங்கள்


கவிச்சோலையில் ஐம்பெரும் காப்பியங்கள்
========================================

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை வரும் ஞாயிற்றுககிழமை, 9-9-2012 அன்று  பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது,

பெக் கியோ சமூக மன்றத்தில் இரவு 7.00 மணிக்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்ச்சியில் ஐம்பெரும் காப்பியங்கள் குறித்த சிறப்புரை ,இடம்பெறவிருக்கிறது. எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் அச்சிறப்புரையை ஆற்றுவார்.

இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "பூக்களைப் பறியுங்கள் ". இந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ்  எழுத்தாளர் கழகம் 30 வெள்ளி வழங்கு​ம்.

வழக்கம்போல் படித்த. சுவைத்த, ரசித்த கவிதை அங்கமும் இடம் பெறும்..

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம.வயிரவன் 93860497,

Thursday, September 6, 2012

கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி 2012


கவியரசு கண்ணதாசன்
பாட்டுத் திறன் போட்டி 2012
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை ஒட்டி  பொது மக்களுக்கு இரண்டு பிரிவுகளாகப் பாட்டுத் திறன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. 16 வயதிற்குக் கீ​ழ் உள்ளவர்களுக்கான தனிக் குரல் பிரிவு முன் அறிவித்தபடி வரும் ஞாயிற்றுக்கிழமை 9ஆம் தேதி நடைபெறும்.

ஆனால் 16 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு இருகுரல் பிரிவு ரத்துசெய்யப்பட்டு அதுவும் தனிக்குரல் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் முதல் சுற்று 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

இரு நாள்களிலும் முதல் சுற்றுப் போட்டிகள் 182 சிசில் ஸ்ட்ரீட் # 04-10 டேப்பாக், சிங்கப்பூர் 069547 (தஞ்சோங் பகார் எம்.ஆர்.டி. நிலையத்திற்கு அருகில்) எனும் முகவரியில் உள்ள எழுத்தாளர் கழக அலுவலகத்தில் காலை 9.00 மணியிலிருந்து நடைபெறும்.

16 வயதிற்கு மேற்பட்டோருக்கான தனிக்குரல் போட்டியில் பங்கேற்க விரும்புவோர்  20.9.2012ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கான படிவத்தை singaporetamilwriters.com இணையத் தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். kannadasan_contest@singaporetamilwriters.com எனும் மின்னஞ்சல் மூலமும் பதிவு செய்யலாம்.

சிங்கப்பூரில் பணிபுரியும்/வசிக்கும் (அடையாள அட்டை அல்லது வேலை அனுமதிச் சீட்டு நகல் தேவை) யாரும் போட்டியில் பங்கேற்கலாம்.

பரிசுகள்
16 வயதிற்குக் கீழ்: முதல் மூன்று பரிசுகளுக்கும் ஊக்கப் பரிசுகளுக்கும் தகுதிக்கேற்றபடி சிறப்பான கேடயங்கள், கோப்பைகள் வழங்கப்பபடும்.

16 வயதிற்கு மேல்: முதல் பரிசு  $200  இரண்டாம் பரிசு  $100   மூன்றாம் பரிசு $75 மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $50. மேல் விவரங்களுக்கு திரு. இராம. வயிரவன் (93860497), திரு. சி. குணசேகரன் (96601051), திரு. கோ. இளங்கோவன் (91012672) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, August 4, 2012

கவிச்சோலையில் பேராசிரியர் கவிஞர் சபா. அருணாசலம் கவிஞர் இரவி பாரதி சிறப்புரைகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும்மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை இன்று சனிக்கிழமை  (4-8-2012) பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது,

பெக் கியோ சமூக மன்றத்தில் இன்று இரவு 7.00 மணிக்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புரை ஆற்றவிருக்கின்றனர்.

தேவகோட்டை சேவுகன்-அண்ணாமலை கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கவிஞர்  சபா.அருணாசலம்பூக்களைப் பறியுங்கள்எனும் தலைப்பிலும் கவிஞர் இரவி பாரதி கண்ணதாசன் கவிதைகள்எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றுவர்.

இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "மூர்த்தி சிறிது ". இந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ்  எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...
தொடர்புக்கு இராம.வயிரவன் 93860497,


Saturday, July 7, 2012

கவிச்சோலையில் இரு தமிழகப் பேராசிரியர்கள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்றஇந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து‍ மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை நிகழ்ச்சி சனிக்கிழமை  7.7.2012ல் நடைபெறவிருக்கிறது.

 பெக் கி்யோ சமுக மன்றத்தில் இரவு மணி 7.00க்குத் தொடங்கும்கவிச்சோலை நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள்சிறப்புரை ஆற்றவிருக்கின்றனர்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர். க. இரவிசங்கர் அவர்களும் நெய்வேலி ஜவகர்லால்நேரு கலைக் கல்லூரியின் மேனாள் முதல்வரும் சென்னைப் பல்கலைக்கழக அகராதித் தொகுப்புத்துறையைச் சேர்ந்தவருமான பேராசிரியர் முனைவர். மருதூர்.அரங்கராசன் அவர்களும் சிறப்புரைஆற்றுவர்.

சிறப்புரைகளுக்குப் பிறகு கலந்துரையாடல் நடைபெறும்.

இம்மாதக் கவிதைத் தலைப்பு "பெரிதினும் பெரிது கேள்".இந்தத் தலைப்பில் கவிதை எழுதி வருமாறு‍ கவிஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறந்தமூன்று‍ கவிதை ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு‍ வழங்கப்படும்.

Thursday, May 31, 2012

கவிச்சோலையில் மலேசியக் கவிஞர் முரசு நெடுமாறன் சிறப்புரை


கவிச்சோலையில் மலேசியக் கவிஞர் முரசு நெடுமாறன் சிறப்புரை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து‍ மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை வரும் சனிக்கிழமை 2.6.2012ல் நடைபெறவிருக்கிறது.

பெக் கி்யோ சமுக மன்றத்தில் சனிக்கிழமை இரவு மணி 7.00க்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் மலேசியாவின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான கவிஞர் முரசு நெடுமாறன் சிறப்புரை ஆற்றுவார். மலேசிய. சிங்கப்பூர்க் கவிதைக் களஞ்சியம் எனும் 1,000 பக்கங்களுக்கு மேற்பட்ட அரிய தொகுப்பை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அவர், அடுத்து "மலேசிய, சிங்கப்பூர்க் கவிஞர்களின் வாழ்வும் பணியும்" எனும் மிகப் பெரிய நுாலை தொகுக்கும் அரிய பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பணி குறித்து விளக்கவும். சிங்கையின் ​மூத்த. இளம் கவிஞர்களைச் சந்தித்து அவர்களின் விவரங்களைத் திரட்டவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள கவிஞர் முரசு நெடுமாறன் திட்டமிட்டுள்ளார். ஆகவே கவிஞர்கள் அனைவரும் வரும் சனிக்கிழமை கவிச் சோலையில் கலந்துகொண்டு அவரது தொகுப்பில் தங்கள் விவரங்கள் இடம்பெறுவதை உறுதி செய்துகொள்ளும்படி செய்ய வேண்டியது.
இம்மாதக் கவிதைத் தலைப்பு "இதோ. இதோ என் வீடு". இந்தத் தலைப்பில் கவிதை எழுதி வருமாறு‍ கவிஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறந்த மூன்று‍ கவிதை ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு‍ வழங்கப்படும்.

வழக்கம்போல் வடித்த, பிடித்த, ரசித்த கவிதை அங்கமும் உண்டு.
கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தமிழன்பர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி‍ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனுமதி இலவசம்.

Tuesday, May 1, 2012

மே மாதம் - 123 வது கவிச்சோலையில் இசைக்கவி ரமணனின் சிறப்புரை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை வரும் ஞாயிற்றுக்கிழமை  6.5.2012ல் நடைபெ உள்ளது. 

 பெக் கி்யோ சமுக மன்றத்தில் இரவு மணி 7.00க்கு தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் இசைக்கவி ரமணன் அவர்கள் , “கவிதையும் கானமும் " எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார் 

 இம்மாத போட்டிக்கவிதைத் தலைப்பு "இடைவெளிகள்". 

சிறந்த மூன்று கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்படும்.


அனுமதி இலவசம்! அனைவரும் வருக!!!

மார்ச் மாதம் - 122 வது கவிச்சோலையில் இராம. வயிரவன் சிற்றுரை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை  சனிக்கிழமை  10.3.2012ல் நடைபெற்றது.

 பெக் கி்யோ சமுக மன்றத்தில் சனிக்கிழமை இரவு மணி 7.00க்குத் தொடங்கிய கவிச்சோலை நிகழ்ச்சியில் கவிஞரும் எழுத்தாளருமான திரு. இராம . வயிரவன் , சிறுகதை எழுதலாம் வாங்க" எனும் தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்.

 கவிதைத் தலைப்பு "திறவு கோல்களை ஏற்காத பூட்டுகள்". 
சிறந்த மூன்று கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்பட்டது.

பிப்ரவரி மாதம் - 121 வது கவிச்சோலையில் வா.மு.சே. திருவள்ளுவர் சிறப்புரை


சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை சனிக்கிழமை  4.2.2012ல் நடைபெற்றது.

 பெக் கி்யோ சமுக மன்றத்தில் சனிக்கிழமை இரவு மணி 7.00க்குத் தொடங்கிய கவிச்சோலை நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதுபெரும் கவிஞரான பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் புதல்வரும் எழுத்தாளருமான திரு. வா.மு.சே. திருவள்ளுவர் "எனது வெளிநாட்டுப் பயணங்கள்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
 கவிதைத் தலைப்பு "வேதனையில் விளைந்த வெளிச்சம்".  சிறந்த மூன்று கவிதைகள் டேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்பட்டது.

Friday, January 6, 2012

கவிச்சோலையில் தமிழ் லெமூரியா ஆசிரியரின் சிறப்புரை




சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து‍ மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை நாளை மறுநாள் ஞாயிற்று‍க்கிழமை நடைபெறவிருக்கிறது.

பெக் கி்யோ சமுக மன்றத்தில் 8-Jan-2012 ஞாயிறு‍ இரவு மணி 7.00க்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் "தமிழ் லெமூரியா" இதழின் ஆசிரியர் திரு. குமணராசன் "புலம் பெயர் தமிழர்களின் மொழியும் இலக்கியமும்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.

இம்மாதக் கவிதைத் தலைப்பு "தமிழா, தமிழா". இந்தத் தலைப்பில் கவிதை எழுதி வருமாறு‍ கவிஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறந்த மூன்று‍ கவிதை ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு‍ வழங்கப்படும்.

வழக்கம்போல் வடித்த, பிடித்த, ரசித்த கவிதை அங்கமும் உண்டு.
கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தமிழன்பர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி‍ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனுமதி இலவசம்.