கவியரசு கண்ணதாசன்
பாட்டுத் திறன் போட்டி 2012
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும்
கவியரசு கண்ணதாசன் விழாவை ஒட்டி பொது மக்களுக்கு
இரண்டு பிரிவுகளாகப் பாட்டுத் திறன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. 16 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கான தனிக் குரல் பிரிவு
முன் அறிவித்தபடி வரும் ஞாயிற்றுக்கிழமை 9ஆம் தேதி நடைபெறும்.
ஆனால் 16 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு இருகுரல் பிரிவு
ரத்துசெய்யப்பட்டு அதுவும் தனிக்குரல் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் முதல் சுற்று 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
இரு நாள்களிலும் முதல் சுற்றுப் போட்டிகள் 182 சிசில் ஸ்ட்ரீட் # 04-10 டேப்பாக், சிங்கப்பூர்
069547 (தஞ்சோங் பகார்
எம்.ஆர்.டி. நிலையத்திற்கு அருகில்) எனும் முகவரியில் உள்ள எழுத்தாளர் கழக அலுவலகத்தில்
காலை 9.00 மணியிலிருந்து நடைபெறும்.
16 வயதிற்கு மேற்பட்டோருக்கான தனிக்குரல் போட்டியில் பங்கேற்க
விரும்புவோர் 20.9.2012ஆம் தேதிக்குள் பதிவு
செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கான படிவத்தை singaporetamilwriters.com
இணையத் தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். kannadasan_contest@singaporetamilwriters.com
எனும் மின்னஞ்சல் மூலமும் பதிவு
செய்யலாம்.
சிங்கப்பூரில் பணிபுரியும்/வசிக்கும் (அடையாள அட்டை அல்லது
வேலை அனுமதிச் சீட்டு நகல் தேவை) யாரும் போட்டியில் பங்கேற்கலாம்.
பரிசுகள்
16 வயதிற்குக் கீழ்: முதல் மூன்று பரிசுகளுக்கும் ஊக்கப் பரிசுகளுக்கும் தகுதிக்கேற்றபடி
சிறப்பான கேடயங்கள், கோப்பைகள் வழங்கப்பபடும்.
16 வயதிற்கு மேல்: முதல் பரிசு $200
இரண்டாம் பரிசு $100
மூன்றாம் பரிசு $75 மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $50. மேல் விவரங்களுக்கு திரு. இராம. வயிரவன் (93860497), திரு.
சி. குணசேகரன் (96601051), திரு. கோ. இளங்கோவன் (91012672) ஆகியோரைத் தொடர்பு
கொள்ளலாம்.
No comments:
Post a Comment