Friday, September 7, 2012

கவிச்சோலையில் ஐம்பெரும் காப்பியங்கள்


கவிச்சோலையில் ஐம்பெரும் காப்பியங்கள்
========================================

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை வரும் ஞாயிற்றுககிழமை, 9-9-2012 அன்று  பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது,

பெக் கியோ சமூக மன்றத்தில் இரவு 7.00 மணிக்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்ச்சியில் ஐம்பெரும் காப்பியங்கள் குறித்த சிறப்புரை ,இடம்பெறவிருக்கிறது. எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் அச்சிறப்புரையை ஆற்றுவார்.

இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "பூக்களைப் பறியுங்கள் ". இந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ்  எழுத்தாளர் கழகம் 30 வெள்ளி வழங்கு​ம்.

வழக்கம்போல் படித்த. சுவைத்த, ரசித்த கவிதை அங்கமும் இடம் பெறும்..

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம.வயிரவன் 93860497,

No comments:

Post a Comment