Thursday, October 4, 2012

கவிச்சோலையில் அம்பை பாலசரஸ்வதி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும்  மாதந்தோறும் இணைந்து படைக்கும்  கவிச்சோலை வரும் சனிககிழமை  (6-10-2012) பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது,


பெக் கியோ சமூக மன்றத்தில் இரவு 7.00 மணிக்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்ச்சியில் தமிழகத்தின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றின் முன்னாள் முதல்வர் அம்பை பாலசரஸ்வதி கவிதைப் பூக்கள் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.


இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "அண்ணல் காந்தி". இந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும்  30 வெள்ளி பரிசு வழங்கப்படும்.
வழக்கம்போல் படித்த, ரசித்த, வடித்த கவிதை அங்கமும உண்டு,
அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497

No comments:

Post a Comment