சொக்கட்டான் - கவிதை
சொற்களை தாயமாக்கிவிட்டாய்
குரலிழந்த நான்
என் பங்கு நியாயத்தை
இறக்கமுடியாமல்
போனேன்
பழமெடுத்து
உன்
வெற்றியைப்
பறையறைகிறாய்
இதற்கு
என்னை
அழைத்திருக்கவே
வேண்டாம்
நீ மட்டுமே
நாள் முழுதும்
விருத்தம் எடுக்க
- மாதங்கி
இந்த வலைப்பக்கத்தில் மாதந்தோறும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து படைக்கும் கவிச்சோலை, கலந்துரையாடல்கள் பற்றிய பதிவுகள் இடம்பெறும்.
Friday, January 1, 2010
நாளை சனிக்கிழமை சனவரி 2ஆம் தேதி மாலை 7 மணியளவில் இம்மாதக் கவிச்சோலை மலருகிறது
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
மதுரை மாவட்ட உதவி ஆட்சியாளராக இருந்து ஓய்வு பெற்றவரும் சிறந்த ஆன்மீகப் பற்றாளருமான திரு.கோட்டீஸ்வரன் அவர்கள் ‘தமிழும் திருவாசகமும்’ என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.
இம்மாதக் கவிதைப்போட்டிக்கான தலைப்பு "மொழியால் இணைவோம்"
சிங்கப்பூர்க் கவிஞர் திரு। முருகடியான் அவர்களின் இலக்கண வகுப்பும் நடைபெறும்।
இடம்: பெக் கியோ சமூக மன்றம் 97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751
அனைவரும் வருக !! அனுமதி இலவசம்!!!
அன்புடன்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
Subscribe to:
Posts (Atom)