Friday, January 6, 2012

கவிச்சோலையில் தமிழ் லெமூரியா ஆசிரியரின் சிறப்புரை




சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து‍ மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை நாளை மறுநாள் ஞாயிற்று‍க்கிழமை நடைபெறவிருக்கிறது.

பெக் கி்யோ சமுக மன்றத்தில் 8-Jan-2012 ஞாயிறு‍ இரவு மணி 7.00க்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் "தமிழ் லெமூரியா" இதழின் ஆசிரியர் திரு. குமணராசன் "புலம் பெயர் தமிழர்களின் மொழியும் இலக்கியமும்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.

இம்மாதக் கவிதைத் தலைப்பு "தமிழா, தமிழா". இந்தத் தலைப்பில் கவிதை எழுதி வருமாறு‍ கவிஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறந்த மூன்று‍ கவிதை ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு‍ வழங்கப்படும்.

வழக்கம்போல் வடித்த, பிடித்த, ரசித்த கவிதை அங்கமும் உண்டு.
கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தமிழன்பர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி‍ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனுமதி இலவசம்.

No comments:

Post a Comment