Thursday, May 31, 2012

கவிச்சோலையில் மலேசியக் கவிஞர் முரசு நெடுமாறன் சிறப்புரை


கவிச்சோலையில் மலேசியக் கவிஞர் முரசு நெடுமாறன் சிறப்புரை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து‍ மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை வரும் சனிக்கிழமை 2.6.2012ல் நடைபெறவிருக்கிறது.

பெக் கி்யோ சமுக மன்றத்தில் சனிக்கிழமை இரவு மணி 7.00க்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் மலேசியாவின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான கவிஞர் முரசு நெடுமாறன் சிறப்புரை ஆற்றுவார். மலேசிய. சிங்கப்பூர்க் கவிதைக் களஞ்சியம் எனும் 1,000 பக்கங்களுக்கு மேற்பட்ட அரிய தொகுப்பை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அவர், அடுத்து "மலேசிய, சிங்கப்பூர்க் கவிஞர்களின் வாழ்வும் பணியும்" எனும் மிகப் பெரிய நுாலை தொகுக்கும் அரிய பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பணி குறித்து விளக்கவும். சிங்கையின் ​மூத்த. இளம் கவிஞர்களைச் சந்தித்து அவர்களின் விவரங்களைத் திரட்டவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள கவிஞர் முரசு நெடுமாறன் திட்டமிட்டுள்ளார். ஆகவே கவிஞர்கள் அனைவரும் வரும் சனிக்கிழமை கவிச் சோலையில் கலந்துகொண்டு அவரது தொகுப்பில் தங்கள் விவரங்கள் இடம்பெறுவதை உறுதி செய்துகொள்ளும்படி செய்ய வேண்டியது.
இம்மாதக் கவிதைத் தலைப்பு "இதோ. இதோ என் வீடு". இந்தத் தலைப்பில் கவிதை எழுதி வருமாறு‍ கவிஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறந்த மூன்று‍ கவிதை ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு‍ வழங்கப்படும்.

வழக்கம்போல் வடித்த, பிடித்த, ரசித்த கவிதை அங்கமும் உண்டு.
கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தமிழன்பர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி‍ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனுமதி இலவசம்.

No comments:

Post a Comment