Saturday, July 7, 2012

கவிச்சோலையில் இரு தமிழகப் பேராசிரியர்கள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்றஇந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து‍ மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை நிகழ்ச்சி சனிக்கிழமை  7.7.2012ல் நடைபெறவிருக்கிறது.

 பெக் கி்யோ சமுக மன்றத்தில் இரவு மணி 7.00க்குத் தொடங்கும்கவிச்சோலை நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள்சிறப்புரை ஆற்றவிருக்கின்றனர்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர். க. இரவிசங்கர் அவர்களும் நெய்வேலி ஜவகர்லால்நேரு கலைக் கல்லூரியின் மேனாள் முதல்வரும் சென்னைப் பல்கலைக்கழக அகராதித் தொகுப்புத்துறையைச் சேர்ந்தவருமான பேராசிரியர் முனைவர். மருதூர்.அரங்கராசன் அவர்களும் சிறப்புரைஆற்றுவர்.

சிறப்புரைகளுக்குப் பிறகு கலந்துரையாடல் நடைபெறும்.

இம்மாதக் கவிதைத் தலைப்பு "பெரிதினும் பெரிது கேள்".இந்தத் தலைப்பில் கவிதை எழுதி வருமாறு‍ கவிஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறந்தமூன்று‍ கவிதை ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு‍ வழங்கப்படும்.

No comments:

Post a Comment