சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் மாதந்தோ றும் இணைந்து படைக்கும் கவிச்சோலை புதிய வடிவத்தில் புதிய அங்கங்களுடன் வரும் ஞாயிற்றுக் கிழமை (3-2-2013) பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது,
இந்தச் கவிச்சோலையிலிருந்து மாதம் மொத்தம் $150 ரொக்கப் பரிசுகளும்,
புத்தகப் பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.இந்தத் தொகையை பெயரை வெளியிட
விரும்பாத தமிழன்பர் ஒருவர் ஓராண்டுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஞாயிறு இரவு 7.00 மணிக்குத் தொடங்கும் கவிச்சோலையில் சில புதிய அங்கங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
கவிச்சோலைப் போட்டிக் கவிதையின் தலைப்பு "பாம்பு". சீனப்
புத்தாண்டை ஒட்டி இந்தத் தலைப்பு கொடுக்கப்படுகிறது. அந்தத் தலைப்பில்
கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். பரிசுகள்
எப்படி வழங்கப்படும் எத்தனை கவிதைகளுக்கு வழங்கப்படும் என்று நிகழ்ச்சியில்
அறிவிக்கப்படும்.
அனுமதி இலவசம்...அனைவரும் வருக...
தொடர்புக்கு இராம.வயிரவன் 93860497,
No comments:
Post a Comment