Thursday, July 1, 2010

கவிச்சோலையில் முனைவர் மா.தியாகராசன்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் இணைந்து நடத்தும் இம்மாதக் கவிச்சோலை சூலை 3, 2010 சனிக்கிழமை இரவு மணி 7.00க்கு பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெறும்.

கவிச்சோலையில் முனைவர் மா.தியாகராசன் அவர்கள் “பேரறிஞர் அண்ணாவின் சிறுகதையில் மொழிநடை” என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.

இம்மாதக் கவிதைப் போட்டிக்கான தலைப்பு "பயணங்கள் முடிவதில்லை". சிறந்த மூன்று கவிதைகளுக்குத் தலா முப்பது வெள்ளி ரொக்கப்பரிசும் உண்டு. அனைவரும் வருக! அனுமதி இலவசம்.

வழக்கம் போல் "படித்தது, பிடித்தது, ரசித்தது" அங்கம் இடம்பெறும்.
கவிதை ஆர்வலர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment