1
புத்தரிசி
இலக்கிய வேந்தர் - எங்களை
இயக்கிடும் ஏந்தல்
எடுத்தவை திறம்பட
முடித்திடும் ஆற்றல்.
தமிழ் எழுத்தாளர் கழகத்
தலைமைக்கு வணக்கம்.
கவிதையா* கட்டுரையா* தொகுப்பாய்வா* - அவை
அனைத்தும் தங்குமிடம்,
அருவியாய்ப்; பொங்குமிடம்
எங்கள் ரத்தினம்.
என்றும் தமிழுக்கு சுபதினம்.
சிரித்த முகமாய்
சிந்தனை வயமாய்
நிந்தனை அறியா மனமாய்
நிலை பெற்ற பண்பிற்குப்
பணிவான வணக்கம்.
சபைக்கு மட்டுமின்றி
சக கவிஞர்களுக்கும் வணக்கம்.
அரிசி போட இடமில்லா அரங்கிலே
அரிசி பற்றிப் பேச வந்திருக்கிறேன்.
2
விதை நெல் வீரியம் கொண்டு
விண்ணைத் தொட்டுவிடலாமென
இருமாந்து வளரும்.
தலைக் கனமும்,
தானியக் கனமும் பெரிதாக,
தொங்கிய தலையாய்
குனிந்த நிலையாய்
மண்ணில் தலை பதிய
மாசு நீங்கிப் பாடம் கற்கும்.
கற்றதனால் ஆன பலனதனால்
பக்குவப்பட்ட மனம்
பசியைப் போக்கப்
பரிசாகத் தந்தது தான்
இந்தப் புத்தரிசி.
உடலை வளைத்து
உழைக்கின்ற வர்க்கத்துக்கு
இது சத்தரிசி.
அரிசி..
தமிழனின் வாழ்வில்
கலாச்சாரத்தின் அடையாளம்.
கடின உழைப்பிற்குப் பரிகாரம்.
தானியங்களின் வரிசையில்
தகுதியான முதலிடம்.
உழுதுண்டு பயிர் செய்து
உய்வு பெற்றதெல்லாம்
அரிசியை வைத்துத் தான்.
3
நெல்லே கூலியாக
நீண்ட நாட்கள் வரை
நிறைவாகப் பெறப்பட்டது.
குவித்து வைத்து அரிசியைக்
கோபுரமாக்கிப் பார்ப்பதை
மங்களம் நிறைந்ததாய்
மக்கள் நினைத்தார்கள்.
அரிசி..
அகர வரிசையை
அறிவிற்குள் ஏற்றி வைக்கப்
பரப்பி வைக்கப்பட்டுப்
பலகையாகிறது.
பிஞ்சு விரல்கள்
கோலம் போட
எழுத்தறிவைப் புத்தியில்
ஏற்றி வைக்கிறது.
வயிற்றுக்கு உணவாவதுடன்
வாழ்க்கைப் பாடத்திற்கும்
வழியாகிறது அரிசி.
அரிசியில் கைவைத்துத் தான்,
அடுத்த பாடம் தொடரும்.
தானத்தில் சிறந்தது அன்னதானம்.
தலையே பிரதானம் ஆனாலும்
வயிறு நிறைந்தால் தான்
வழக்கத்தில் அனைத்தும் சீராகும் - அந்த
4
அடிப்படை தேவையைப்
படிப்படியாய்ப் பூர்த்தி செய்வது அரிசி.
பக்குவப் படுத்துவதும் அரிசி.
சோற்றைச் சேர்த்தால்
சத்தெல்லாம் கொழுப்பாகும்,
சுத்தமாய் நலம் கெடும்,
என்பது மருத்துவம்
அதற்காக ஒட்டுமொத்தமாய்
அரிசியைத் தள்ள முடியுமா?
அது இல்லாத உணவைத் தான்
உள்ளே தள்ள முடியுமா?
அரிசி சேராத உடம்பு
அலுப்பைச் சேர்த்துக் கொள்ளும்.
அரிசியுடன் உழைப்பு
ஆறு கட்;டு உடம்பைத்; தரும்.
உழவனின் வேர்வையும்
உப்புக் கரிக்கும் - அந்த
உன்னதத் தீர்த்தத்தால் தான்
உலகமே இயங்கும்.
உலகை இயக்குபவன்
உடலிலே சட்டையில்லை.
ஊருக்குள் உலை பொங்க வைப்பவன்,
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியதில்லை
ஆகாயம் அழுகாமல் போனதால்
அடிக்கடி அழுகின்ற நிலை உழவனுக்கு.
5
கை விரித்த காவிரியும்,
கண் திறக்கா ஆகாயமும்
உழவனின் நிலையை
உருப்பட விடவில்லை.
தண்ணீர் மட்டுமல்ல,
தாங்கி வரும் மணலும்
தட்டுப்படாமல் போனதால்
விதைக்கப்படும்
விளைச்சல் நிலங்களிலெல்லாம்
வீடுகள் முளைத்துக் கட்டடக்
காடுகளாகி விட்டன.
நதிக்கரைகளில் வளர்ந்தது
நாகரீகமெனப் படித்திருக்கிறேhம்.
நதிகளைத் தொலைத்துவிட்டு
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறேhம்?
நிலைமை இப்படியே
நீடித்துக் கொண்டிருந்தால்,
விவசாயம் என்பதை
விளக்கப் படத்துடன் -நம்
பரம்பரையினர்
பாடப் புத்தகத்தைப்
பார்த்துத் தான் தெரிந்து
கொள்ள வேண்டியிருக்கும்.
மக்கள் தொகை ஒருபுறம்
மலையளவு உயர்ந்திருக்க
விளைச்சல் நிலங்களோ
6
எதிர்மறையாய்க் குறைகிறது.
புத்தரிசியைப் பொங்கலன்று
பார்க்கின்ற பரவசம்
மொத்தமாய்க் காணாமல்
முழுவதும் தொலைந்து விடுமோ – என்ற
அச்சம் தான் அதிகமாகிறது.
அப்புறம் அரிசி என்பதே
அரிதாகப் போய்விடும்.
அறுவடை முடிந்து,
அரிசியைப் பிரித்து,
இனியதாசனின் புதுப்பானைக்கு
இதோ புத்தரிசி.
மாதங்கியிடம்
மஞ்சளை வாங்கி
வளர்ந்து செழித்த
வைரவன் தரும் கரும்புடன்
இனிப்பான பொங்கலை
இளங்கோவனும்,
சத்தான வெண்பொங்கலை
சக்திக் கண்ணனும்,
விருந்தாய்ப் படைக்க
மனித நேயத்தின் அடையாளம்
மாட்டுப் பொங்கலுடன்
மகிழ்வுடன் கோவிந்தராசு முடிக்கட்டும்.
விருந்து பொங்கலில் மட்டுமல்ல.
7
விளைத்திடும் தமிழிலும் தான்.
-சித. அருணாசலம்.
புத்தரிசி
இலக்கிய வேந்தர் - எங்களை
இயக்கிடும் ஏந்தல்
எடுத்தவை திறம்பட
முடித்திடும் ஆற்றல்.
தமிழ் எழுத்தாளர் கழகத்
தலைமைக்கு வணக்கம்.
கவிதையா* கட்டுரையா* தொகுப்பாய்வா* - அவை
அனைத்தும் தங்குமிடம்,
அருவியாய்ப்; பொங்குமிடம்
எங்கள் ரத்தினம்.
என்றும் தமிழுக்கு சுபதினம்.
சிரித்த முகமாய்
சிந்தனை வயமாய்
நிந்தனை அறியா மனமாய்
நிலை பெற்ற பண்பிற்குப்
பணிவான வணக்கம்.
சபைக்கு மட்டுமின்றி
சக கவிஞர்களுக்கும் வணக்கம்.
அரிசி போட இடமில்லா அரங்கிலே
அரிசி பற்றிப் பேச வந்திருக்கிறேன்.
2
விதை நெல் வீரியம் கொண்டு
விண்ணைத் தொட்டுவிடலாமென
இருமாந்து வளரும்.
தலைக் கனமும்,
தானியக் கனமும் பெரிதாக,
தொங்கிய தலையாய்
குனிந்த நிலையாய்
மண்ணில் தலை பதிய
மாசு நீங்கிப் பாடம் கற்கும்.
கற்றதனால் ஆன பலனதனால்
பக்குவப்பட்ட மனம்
பசியைப் போக்கப்
பரிசாகத் தந்தது தான்
இந்தப் புத்தரிசி.
உடலை வளைத்து
உழைக்கின்ற வர்க்கத்துக்கு
இது சத்தரிசி.
அரிசி..
தமிழனின் வாழ்வில்
கலாச்சாரத்தின் அடையாளம்.
கடின உழைப்பிற்குப் பரிகாரம்.
தானியங்களின் வரிசையில்
தகுதியான முதலிடம்.
உழுதுண்டு பயிர் செய்து
உய்வு பெற்றதெல்லாம்
அரிசியை வைத்துத் தான்.
3
நெல்லே கூலியாக
நீண்ட நாட்கள் வரை
நிறைவாகப் பெறப்பட்டது.
குவித்து வைத்து அரிசியைக்
கோபுரமாக்கிப் பார்ப்பதை
மங்களம் நிறைந்ததாய்
மக்கள் நினைத்தார்கள்.
அரிசி..
அகர வரிசையை
அறிவிற்குள் ஏற்றி வைக்கப்
பரப்பி வைக்கப்பட்டுப்
பலகையாகிறது.
பிஞ்சு விரல்கள்
கோலம் போட
எழுத்தறிவைப் புத்தியில்
ஏற்றி வைக்கிறது.
வயிற்றுக்கு உணவாவதுடன்
வாழ்க்கைப் பாடத்திற்கும்
வழியாகிறது அரிசி.
அரிசியில் கைவைத்துத் தான்,
அடுத்த பாடம் தொடரும்.
தானத்தில் சிறந்தது அன்னதானம்.
தலையே பிரதானம் ஆனாலும்
வயிறு நிறைந்தால் தான்
வழக்கத்தில் அனைத்தும் சீராகும் - அந்த
4
அடிப்படை தேவையைப்
படிப்படியாய்ப் பூர்த்தி செய்வது அரிசி.
பக்குவப் படுத்துவதும் அரிசி.
சோற்றைச் சேர்த்தால்
சத்தெல்லாம் கொழுப்பாகும்,
சுத்தமாய் நலம் கெடும்,
என்பது மருத்துவம்
அதற்காக ஒட்டுமொத்தமாய்
அரிசியைத் தள்ள முடியுமா?
அது இல்லாத உணவைத் தான்
உள்ளே தள்ள முடியுமா?
அரிசி சேராத உடம்பு
அலுப்பைச் சேர்த்துக் கொள்ளும்.
அரிசியுடன் உழைப்பு
ஆறு கட்;டு உடம்பைத்; தரும்.
உழவனின் வேர்வையும்
உப்புக் கரிக்கும் - அந்த
உன்னதத் தீர்த்தத்தால் தான்
உலகமே இயங்கும்.
உலகை இயக்குபவன்
உடலிலே சட்டையில்லை.
ஊருக்குள் உலை பொங்க வைப்பவன்,
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியதில்லை
ஆகாயம் அழுகாமல் போனதால்
அடிக்கடி அழுகின்ற நிலை உழவனுக்கு.
5
கை விரித்த காவிரியும்,
கண் திறக்கா ஆகாயமும்
உழவனின் நிலையை
உருப்பட விடவில்லை.
தண்ணீர் மட்டுமல்ல,
தாங்கி வரும் மணலும்
தட்டுப்படாமல் போனதால்
விதைக்கப்படும்
விளைச்சல் நிலங்களிலெல்லாம்
வீடுகள் முளைத்துக் கட்டடக்
காடுகளாகி விட்டன.
நதிக்கரைகளில் வளர்ந்தது
நாகரீகமெனப் படித்திருக்கிறேhம்.
நதிகளைத் தொலைத்துவிட்டு
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறேhம்?
நிலைமை இப்படியே
நீடித்துக் கொண்டிருந்தால்,
விவசாயம் என்பதை
விளக்கப் படத்துடன் -நம்
பரம்பரையினர்
பாடப் புத்தகத்தைப்
பார்த்துத் தான் தெரிந்து
கொள்ள வேண்டியிருக்கும்.
மக்கள் தொகை ஒருபுறம்
மலையளவு உயர்ந்திருக்க
விளைச்சல் நிலங்களோ
6
எதிர்மறையாய்க் குறைகிறது.
புத்தரிசியைப் பொங்கலன்று
பார்க்கின்ற பரவசம்
மொத்தமாய்க் காணாமல்
முழுவதும் தொலைந்து விடுமோ – என்ற
அச்சம் தான் அதிகமாகிறது.
அப்புறம் அரிசி என்பதே
அரிதாகப் போய்விடும்.
அறுவடை முடிந்து,
அரிசியைப் பிரித்து,
இனியதாசனின் புதுப்பானைக்கு
இதோ புத்தரிசி.
மாதங்கியிடம்
மஞ்சளை வாங்கி
வளர்ந்து செழித்த
வைரவன் தரும் கரும்புடன்
இனிப்பான பொங்கலை
இளங்கோவனும்,
சத்தான வெண்பொங்கலை
சக்திக் கண்ணனும்,
விருந்தாய்ப் படைக்க
மனித நேயத்தின் அடையாளம்
மாட்டுப் பொங்கலுடன்
மகிழ்வுடன் கோவிந்தராசு முடிக்கட்டும்.
விருந்து பொங்கலில் மட்டுமல்ல.
7
விளைத்திடும் தமிழிலும் தான்.
-சித. அருணாசலம்.
செம்மொழியாம் தமிழுக்கு வணக்கம்
ReplyDeleteஅவைக்கு வணக்கம் !
அவைத் தலைவன்
இரத்தின வெங்கடேசன்
கல்லும் கடவுளும்
சேர்ந்த கலவை
கல் இரத்தினம்
கடவுள் வெங்கடேசன்
ஆதலால்
ஜொலிக்கிறான்
அவை சிறக்கிறது!
நீங்கள் வள்ளல்கள்
விதை கொடுங்கள்
கவிதை செய்கிறோம்
நெல் கொடுங்கள்
பொங்கல் செய்கிறோம்
கரவொலி கொடுங்கள்
‘பா’ ஒலி செய்கிறோம்!
தலைப்பு 'வெண்பொங்கல்'
மனமென்ற பானையில்
நிறைய அரிசி
நிறைய அன்பு
நிறைய பருப்பு
அளவான நெய்
அளவான மிளகு
மிதமான உப்பு
மற்றும்
அதிக வேர்வைநீர்
சேர்த்து
வடித்த பொங்கல்
இங்கே!
உங்களுக்காக...
இருபதாம் நூற்றாண்டு
வேகம் வேகம் வேகம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு
அதிவேகம் அதிவேகம் அதிவேகம்
மனிதர்காள்!
நீங்கள் ஏது செய்யப்போகிறீர்கள்?
மனிதம் தொலைத்து
மகோன்னதம் அடைவீர்களோ?
மனிதம் அழித்து
மகிழ்ச்சி அடைவீர்களோ?
மனிதம் மறந்து
மகத்துவம் பேசுவீர்களோ?
மனிதம் புதைத்து
மாதவம் செய்வீர்களோ?
ஏது செய்யப்போகிறீர்?
தோழர்களே
பூமிக்கவிதையை எழுதும்
மனிதமும்
பூமியை வாசிக்கும்
மனமும்
குழையட்டும் மகிழ்ச்சியாய்
குழைத்து குழைத்து
அன்பைக் குழைத்து
கசிந்து கசிந்து
அன்பைக் கசிந்து
உருகி உருகி
அன்பாய் உருகி
பெருகிப் பெருகி
அன்பாய்ப் பெருகி
மனம் நிறைய
மனம் நெகிழ
அமைதியாய்
அமுதமாய்
சமைப்போம்
வெண்பொங்கல்...
அள்ளித் தாருங்கள்!
உங்கள் அன்பை...
மொழி
உங்களின் அடையாளம்
அடையாளம் தொலைப்பது
மிகச் சுலபம்
இது
கணினிக் காலம்
சங்க காலம் முதல்
இன்று வரை
எப்போதும் பழமையாய்
எப்போதும் புதியதாய்
எப்போதும் இனிமையாய்
எப்போதும் இளமையாய்
இருப்பது தமிழ்
உன் தமிழ் ...
ஞானச்செருக்கு கொள்
உன் வேர்களை நினைத்து
உன் அடையாளத்தை நினைத்து...
இசை
பூமியின் மூச்சு
மாய மொழி
மனதின் மொழி
மருத யாழ்
மகிழ்ச்சி செய்யும்
அதன் நரம்பாகு!
உடுக்கையில்
உன்னைக் கட்டு!
கைக்கிளையில்
கவியெழுது!
தமிழிசையை
மனதில் நடு!
நடவுப் பாட்டு
உழவுப் பாட்டு
ஏற்றப் பாட்டு
ஆயிரமாயிரம்
தமிழிசை மெட்டுக்கள்!
கர்வம் கொள்!
நம் தமிழிசையில்
பூமியை மீட்டுவோம்!
இசை இன்பம் பெருகும்
நன்மைகள் பெருகும்
தமிழிசையில்
உங்களின்
‘பொங்கலோ பொங்கல்’ என்ற
குலவை சத்தத்தில்
ஆகாயம் அற்புதமாகட்டும்
நதிகள் சேரட்டும்
மனிதம் ஒன்றாகட்டும்!
முரண்
மண்பானையில்
சமைத்தபோது
மகிழ்ச்சி பெருகுது
நுண்ணலைப் பானையில் (மைக்ரோவேவ்)
சமைக்கும் போது
மகிழ்ச்சி குறையுது!
காடுகளில்
வசித்தபோது
வீடுகள் இல்லை
ஆனால்
மனமிருந்தது!
வீடுகளில்
வசிக்கும் போது
மனமும் இல்லை
காடுகளுமில்லை!
அன்று
உறவுகள் கூடின இல்லங்களில்
இன்றும்
உறவுகள் கூடுகின்றன
கணினி வலைகளில்!
மாட்டு வண்டியில்
பயணித்தபோது
மனம் லேசாகுது
சொகுசுக் காரில்
பறக்கும்போது
மனம் கனமாகுது
அன்று
விடையாய் இருந்ததது
காதல்
இன்றோ
வினாவாகவே இருக்கிறது
காதல்
எப்படிவேண்டுமானாலும்
மாற்றங்கள்
இருந்துவிட்டுப் போகட்டும்
எப்படி வேண்டுமானாலும்
மாற்றங்கள்
நிகழ்ந்துவிட்டுப் போகட்டும்
தயவுசெய்து
வயல்களில் மட்டும்
சுவர் எழுப்பாதீர்கள்
கட்டிடம் கட்டாதீர்கள்
தொழிற்சாலைகள்
திறக்காதீர்கள்
வெண்பொங்கலில்
கண்ணீர் சேர்ந்து
உப்புக் கரிக்கும்
பசுமை மறையும்!
பூமி மெல்ல மெல்ல
மறைந்துவிடும்!
தோழர்களே
இது என் கோரிக்கையன்று!
உங்களுக்கு
நான் விடுக்கும் எச்சரிக்கை!
உழவர்கள்
சூரியப் பிழம்புகள்
பூதேவர்கள்
அவர்களின் வியர்வைகள்
உங்களின்
இரத்தத்துளிகள்!
அவர்களின் உழைப்பு
பூமியின் முதல் வேதம்!
அவர்களின் புன்னகை
பூமியின் முதல் குறள்!
உழவர்களின் மனம்
வெண்மை
ஆம்
வெண்பொங்கலின் நிறமும்
வெண்மைதான்!
ஒவ்வொரு ஒளியும்
உழவனின் பார்வை
ஒவ்வொரு இசையும்
உழவனின் ஸ்பரிசம்
ஒவ்வொரு அரிசியும்
உழவனின் வேர்வை
உலகம் உயிர்த்தது
உழவனின் உழைப்பில்
உயிர் அமுதமானது
உழவன் உன்னை வாழ்விக்கிறான்
ஆதலால் கடவுளாகிறான்!
வணங்குவோம் உழவனை!
செய்
ஏதாவது செய்!
நீ ஒரு கருப்பு மிளகு
உன்னை
பொங்கலில் சேர்!
மருந்தாய் இரு
'வெண்பொங்கல்'
இனிக்கும்!
வெண்பொங்கல்
பிரியர்களே
எது கொணர்வீர் எமக்கு?
மனிதம்
அன்பு
உழைப்பு
எது தருவீர் எமக்கு?
தமிழ்
தமிழிசை
மகிழ்ச்சி!!!
வணக்கம்
--venpongal thanthavar kavinar Sakthi kannan
ReplyDelete