Monday, October 19, 2009

நிழல் தேடும் மரங்கள்

நிழல் தேடும் மரங்கள் (கவிச்சோலை அக்டோபர் - 11/10/2009 )நான் (இராம।வயிரவன்) வாசித்த கவிதை
==========================================
இங்கே கவிச்சோலையிலே
தன்னையே கொடுக்கும் தென்னை
வாழை, புளிமா என
பலா உள்பட பல மரங்களும் இருக்கின்றன
பழ மரங்களும் இருக்கின்றன

சுகமான
நிழல் தருகின்ற
இந்த மரங்கள்
கிளை விரித்து
வேர் பரப்பி
எதையோ தேடுகின்றன?
ஆம் நிழல் தேடுகின்றன!

ஆனால் அந்த நிழல்
கவிச்சோலைக்கு வராமல்
எங்கே வெயிலில் அலைந்து கொண்டிருக்கிறதோ?
எந்தப் பாலைவனத்தில் சுற்றித்திரிகிறதோ?
எந்தப் பாறையில் விழுந்து கிடக்கிறதோ?

வாருங்கள்!
நாம் எல்லாருமாய்ப் போய்
அடுத்த கவிச்சோலைக்காவது
அந்த நிழலை
அழைத்து வந்து விடுவோம்!

குறிப்பு (வேண்டுகோள்): கவிச்சோலைக் கவிஞர்களே உங்கள் கவிச்சோலைக் கவிதைகளை இங்கே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் - அன்புடன் இராமவயிரவன்.

1 comment: