Saturday, August 28, 2010

பிரபஞ்சனின் சிறுகதைப் பயிலரங்கு


வரும் 29.08.2010 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.00 முதல் 12.30 வரை விக்டோரியாசாலையில் உள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சிறுகதைப் பயிலரங்கு நடைபெறும்.

பயிலரங்கிற்குப் பிறகு மதிய உணவு வழங்கப்படும். கட்டணம் ஒருவருக்கு 20 வெள்ளி மட்டுமே. தனது படைப்புகளுக்குப் பல பரிசுகளையும் விருதுகளையும் வென்று தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகப் பாராட்டுப் பெற்றுள்ள திரு பிரபஞ்சனின் இந்தச் சிறுகதைப் பயிலரங்கை வளர்ந்துவரும் சிங்கை எழுத்தாளர்கள் தவறவிட மாட்டார்கள் என நம்புகிறோம்.

பயிலரங்கில் பங்கேற்க 40 பேருக்கு மட்டுமே இடமுண்டு என்பதால் முதலில் வருவோருக்கு முதற் சலகை எனும் அடிப்படையில் பதிவு செய்யப்படும்.

பயிலரங்கில் பங்கேற்க விரும்புவோர் எழுத்தாளர் கழகத்தின் துணைச் செயலாளர் திரு. இராம. வயிரவன் (93860497) அல்லது பொருளாளர் திருமதி சித்ரா ரமேஷ் (97733186) ஆகியோருடன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பயிலரங்கில் பங்கேற்போருக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கப்படும்।


விரைந்து பதிவு செய்க. யோசித்துத் தாமதப்படுத்திப் பின்னர் வருந்துவதில் பயனில்லை. இத்தகைய சிறந்த எழுத்தாளர்கள் நடத்தும் பயிலரங்கில் பங்கேற்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது.

அன்புடன்
நா. ஆண்டியப்பன்
தலைவர்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்.

6 comments: